கன்னியாகுமரியில் கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்.. சுற்றுலா பயணிகளுக்கு குட்நியூஸ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி 3 கடல்கள் சங்கமிக்கும் புனித இடம் என்பதால் அங்கு அதிகமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மிக யாத்ரீகர்கள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியை பொறுத்தவரை ராட்சத அலைகள் சர்வ சாதாரணமாக வரும் என்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கடல் பகுதியாகும். அதனால் தான் குளிக்க கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது கன்னியாகுமரியில் கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம் அமைக்க சுற்றுலா அலுவலகம் சார்பில் திட்டமிடப்பட்டிருக்கிறது.